செய்திகள்
காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: கணவர்-மாமியார் மீது புகார்
கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் மற்றும் மாமியார் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை:
காரைக்குடி தியாகராஜன் செட்டியார் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (வயது34). இவருக்கும் திருக்கோஷ்டியூர் அருகே உள்ள பி.கருங்குளத்தை சேர்ந்த நாச்சியப்பன் (44) என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். காரைக்குடியில் செக்யூரிட்டி தலைமை காவலராக நாச்சியப்பன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கணவர் மற்றும் மாமியார் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லாவண்யா புகார் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருமணத்தின்போது 71 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் போன்றவை வரதட்சணையாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தொழில் தொடங்க வேண்டி, கூடுதலாக ரூ.40 லட்சம் கேட்டு கணவர் நாச்சியப்பன் துன்புறுத்துகிறார். அவரது செயலுக்கு மாமியார் சகுந்தலாவும் உடந்தையாக உள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காரைக்குடி தியாகராஜன் செட்டியார் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (வயது34). இவருக்கும் திருக்கோஷ்டியூர் அருகே உள்ள பி.கருங்குளத்தை சேர்ந்த நாச்சியப்பன் (44) என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். காரைக்குடியில் செக்யூரிட்டி தலைமை காவலராக நாச்சியப்பன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கணவர் மற்றும் மாமியார் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லாவண்யா புகார் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருமணத்தின்போது 71 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் போன்றவை வரதட்சணையாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தொழில் தொடங்க வேண்டி, கூடுதலாக ரூ.40 லட்சம் கேட்டு கணவர் நாச்சியப்பன் துன்புறுத்துகிறார். அவரது செயலுக்கு மாமியார் சகுந்தலாவும் உடந்தையாக உள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.