செய்திகள்

மானாமதுரையில் மாணவியை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு

Published On 2016-09-03 11:35 IST   |   Update On 2016-09-03 11:35:00 IST
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாணவியை தாக்கியதாக ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி. இவரது மகள் மஞ்சுஸ்ரீ (வயது6). இவள் அங்குள்ள தனியார் நர்சரி பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் வகுப்பில் பாடம் சரியாக படிக்கவில்லை எனக்கூறி ஆசிரியை மோகனப்பிரியா கம்பால் அடித்தாராம். இதனை பெற்றோரிடம் மஞ்சுஸ்ரீ கூறியுள்ளார்.

அவர்கள் பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதன்பேரில் ஆசிரியையை நிர்வாகம் கண்டித்துள்ளது. அதன் பிறகு பள்ளிக்கு சென்ற மஞ்சுஸ்ரீயை வகுப்பறையின் வெளியே ஆசிரியை மோகனப்பிரியா நிற்க வைத்தாராம்.

இது குறித்து தெரிய வந்ததும் மஞ்சுஸ்ரீயின் தாய் ஆர்த்தி, மானாமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News