செய்திகள்

திருப்புவனத்தில் இளம்பெண் மாயம்

Published On 2016-09-01 16:20 IST   |   Update On 2016-09-01 16:20:00 IST
மொபைல் கடைக்கு வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சிவகங்கை:

திருப்புவனம் தாலுகா பி.வேலாங்குளத்தை சேர்ந்தவர் வீரகுமார் (வயது30). இவரது மனைவி நாகலட்சுமி (22). இவர் திருப்புவனம் பகுதியில் உள்ள தனியார் மொபைல் கடையில் வேலைபார்த்து வந்தார். கடந்த 26-ந்தேதி வீட்டில் இருந்து வழக்கம்போல் நாகலட்சுமி வேலைக்கு சென்றார்.

அதன்பிறகு மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து திருப்புவனம் போலீசில் வீரகுமார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து மாயமான நாகலட்சுமியை தேடி வருகிறார்.

Similar News