செய்திகள்

சிவகங்கையில் பிளஸ்-1 மாணவர் தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2016-09-01 10:52 IST   |   Update On 2016-09-01 10:52:00 IST
சிவகங்கையில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:

சிவகங்கை தாலுகா புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், விவசாயி. இவரது மகன் ஆதிக்ராஜா (வயது17).

சிவகங்கையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆதிக்ராஜா பிளஸ்-1 படித்து வந்தார். சமீப காலமாக இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆதிக்ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News