செய்திகள்

தேவக்கோட்டையில் அண்ணன்- தம்பி வீட்டின் கதவுகளை உடைத்து நகை-பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

Published On 2016-08-31 16:22 IST   |   Update On 2016-08-31 16:22:00 IST
தேவக்கோட்டையில் அண்ணன்-தம்பி வீடுகளை உடைத்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது தம்பி பாண்டி. 2 பேரும் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார்கள். 2 பேரின் வீடுகளும் ஜீவாநகரில் அடுத்தடுத்து உள்ளது. மணிகண்டனின் மனைவி செந்தாமரை மற்றும் பாண்டியன் மனைவி மலையரசி ஆகியோர் வீடுகளை பூட்டிவிட்டு நேற்று முன் தினம் மன்னி கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டனர்.

நேற்று வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. செந்தாமரை வீட்டில் பீரோவில் இருந்த லேப்-டாப், செல்போன், 150 மலேசிய டாலர் மற்றும் மலையரசி வீட்டு பீரோவில் இருந்த 2¼ பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது.

இது குறித்து தேவக்கோட்டை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Similar News