செய்திகள்
காரைக்குடி அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு: 68 பேர் மீது வழக்கு
காரைக்குடி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக 68 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள கழனிவாசல் கிராம நிர்வாக அதிகாரி அருள்ராஜ் (வயது27), இவர் குன்றக்குடி போலீசில் ஒரு புகார் செய்துள்ளார்.
அதில். காரைக்குடி அருகே உள்ள ஓ.சிறுவயல் கிராமத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை (புல எண்கள் 253, 254, 258) 2 வருடமாக ஆக்கிரமிப்பு செய்த அதே பகுதியை சேர்ந்த தேவா, தினகரபாண்டியன், செல்வம் உள்பட 68 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் விசாரணை நடத்தி 68 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளார்.