செய்திகள்

ரேணுகாதேவி அம்மன் கோவில் திருவிழா: ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2016-08-29 13:10 GMT   |   Update On 2016-08-29 13:10 GMT
கோவில் திருவிழாவை யொட்டி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1600க்கும் அதிகமான மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள ரேணுகா தேவி அம்மன் கோவிலில் 10 நாள் திருவிழா நடைபெறுவதையொட்டி அப்பகுதி விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐஸ் உற்பத்தி, கருவாடு உற்பத்தி உள்பட மீன்பிடி சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் ரூ.40 லட்சம் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 10 நாட்கள் திருவிழா முடிந் ததும் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முதல் போராட்டத்தை வாபஸ் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News