செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
தேசிய வேலை உறுதித்திட்டத்தில் ஆண்டுக்கு நூறுநாள் வேலையும் சட்டப்படியான கூலி ரூ.203-ம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 102 பெண்கள் உட்பட 213 பேர் கைது செய்யப்பட்டனர்.
குன்றாண்டார்கோவில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய பேராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பி.மருதப்பா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செயலாளர் சங்கர் பேசினார். நிர்வாகிகள் முனியய்யா, கே.தங்கவேல், பீமராஜ், சத்திவேல், பழனிச்சாமி உள்ளிட்ட 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் துரைச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடையப்பன், பொன்னுச்சாமி, மணிவேல், லெட்சுமி, சுப்பையா, சந்திரபாண்டியன், தங்கராஜ் மற்றும் 84 பெண்கள் உட்பட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னவாசலில் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டப்பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் சுப்பையா, முருகன், சோலையன், ராமையா, மணி, அஞ்சலைதேவி மற்றும் 12 பெண்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவுடையார் கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வீரையா மற்றும் சுப்பிரமணியன், காசி, கலந்தர், காளியம்மாளார் உள்ளிட்டோர் பேசினர்.
தேசிய வேலை உறுதித்திட்டத்தில் ஆண்டுக்கு நூறுநாள் வேலையும் சட்டப்படியான கூலி ரூ.203-ம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 102 பெண்கள் உட்பட 213 பேர் கைது செய்யப்பட்டனர்.
குன்றாண்டார்கோவில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய பேராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பி.மருதப்பா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செயலாளர் சங்கர் பேசினார். நிர்வாகிகள் முனியய்யா, கே.தங்கவேல், பீமராஜ், சத்திவேல், பழனிச்சாமி உள்ளிட்ட 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் துரைச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடையப்பன், பொன்னுச்சாமி, மணிவேல், லெட்சுமி, சுப்பையா, சந்திரபாண்டியன், தங்கராஜ் மற்றும் 84 பெண்கள் உட்பட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னவாசலில் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டப்பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் சுப்பையா, முருகன், சோலையன், ராமையா, மணி, அஞ்சலைதேவி மற்றும் 12 பெண்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவுடையார் கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வீரையா மற்றும் சுப்பிரமணியன், காசி, கலந்தர், காளியம்மாளார் உள்ளிட்டோர் பேசினர்.