செய்திகள்

திருக்கோஷ்டியூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2016-08-26 14:12 IST   |   Update On 2016-08-26 14:12:00 IST
திருக்கோஷ்டியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் தொழிலாளி ஒருவர் பலியானார்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் பக்கமுள்ள பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது40), கூலி தொழிலாளி. இவர் நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளில் திருக்கோஷ்டியூரில் இருந்து ஊருக்கு திரும்பினார்.

தானிபட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திருப்பத்தூரில் இருந்து சிவகங்கை சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பெரியகருப்பன் அதே இடத்தில் பலியானார். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த ராம கண்ணன் (30) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இவ்விபத்து குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News