செய்திகள்

பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி

Published On 2016-08-26 13:02 IST   |   Update On 2016-08-26 13:02:00 IST
சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னமராவதி:

திருச்சி மாவட்டம் வளநாடு சேர்ந்தவர் சங்கன் மகன் திருப்பதி வெங்கடேசன் (வயது32). இவர் தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதி வந்துள்ளார்.

பின்னர் அவர் வெள்ளையாண்டிபட்டி விளக்கு என்ற இடத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறி விழுந்துள்ளது. இதில் பலத்த காயத்துடன் திருப்பதிவெங்கடேசன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார்.இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News