செய்திகள்
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியில் பயிலும் சிறுவர், சிறுமியர்கள் கிருஷ்ணவேடம் அணிந்து நடனம் ஆடினர். புல்லாங்குழல் ஊதி பாட்டுப்பாடி மகிழ்வித்தனர். மேலும் கிருஷ்ணரின் சேட்டைகளான வாயில் வழிய, வழிய வெண்ணைய் உண்பது போன்ற நிகழ்ச்சிகளையும் நடித்து காட்டினர். ஏராளமான குழந்தைகளும், பெற்றோர்களும் போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் தங்க மூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.