செய்திகள்

கீரனூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2016-08-19 17:57 IST   |   Update On 2016-08-19 17:57:00 IST
கீரனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை:

கீரனூர் மின் வாரிய செயற் பொறியாளர் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

புதுக்கோட்டை, குளத்தூர் தாலூகா, தொண்டை மான்நல்லூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதியான தொண்டைமான்நல்லூர், கீரனூர், உடவயல், குளத்தூர், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், தென்ன திரையான் பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாப் பல்கலைக்கழகம் ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணிவரை மின்சாரம் இருக்காது என்று கீரனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Similar News