செய்திகள்
கீரனூர் அருகே கார் மோதி வாலிபர் பலி
கீரனூர் அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்
கீரனூர்:
கீரனூர் அருகே உள்ள அம்மாசத்திரத்தை சேர்ந்தவர் முத்துகருப்பன் (வயது 27). இவர் கடந்த 12-ந்தேதி இரவு அம்மாசத்திரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முத்துகருப்பன் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிக்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துகருப்பன் இறந்தார். விபத்து குறித்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் வழக்குப் பதிவு செய்து, கார் டிரைவர் முத்துவை கைது செய்தார்.
கீரனூர் அருகே உள்ள அம்மாசத்திரத்தை சேர்ந்தவர் முத்துகருப்பன் (வயது 27). இவர் கடந்த 12-ந்தேதி இரவு அம்மாசத்திரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முத்துகருப்பன் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிக்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துகருப்பன் இறந்தார். விபத்து குறித்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் வழக்குப் பதிவு செய்து, கார் டிரைவர் முத்துவை கைது செய்தார்.