திருமயத்தில் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கே.பி.கே. தங்கவேலு தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு திருமயம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரகுபதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.பி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமயம் அருகே உள்ள குழிபிறை ஊராட்சியிலிருந்து அ.தி.மு.க., த.மா.கா., தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
அவர்களுக்கு திருமயம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரகுபதி சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சர்புதீன்,முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் சுப.துரைராஜா,முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராஜமாணிக்கம் ,ஊராட்சி மன்றத் தலைவர்கள் சிதம்பரம், மங்களராமன், பழனிவேலு, ஒன்றிய துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் காத்தப்பன், மாவட்ட பிரதிநிதி மேகநாதன், செம்பையா, வெள்ளைச்சாமி ,,ஏ.எல்.முத்து, பி.ஆர்.அறிவ ழகன், ரெத்தினவேலு, சி.சந்திரன் , ராஜா , ஊராட்சி செயலாளர் அண்ணா துரை, முல்லை ரமேஷ், வி.மணி மாறன், எஸ்.சேது ராமன், கணேசன் உட்பட ஏராளமான தி.மு.க. வினர் கலந்து கொண்டனர்.