செய்திகள்

வேதாரண்யம் அருகே சித்தப்பாவை அரிவாளால் வெட்டிய வாலிபர்

Published On 2016-07-23 15:23 IST   |   Update On 2016-07-23 15:23:00 IST
வேதாரண்யம் அருகே சித்தப்பாவை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் சாமிநாதன் (53). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அதே ஊரே சேர்ந்தவர் சாமிநாதன் அண்ணன் பஞ்சநாதன் மகன் குமார். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

சாமிநாதன் கடைக்கு சென்று வரும் போது மீன் வியாபாரம் செய்து விட்டு வீடு திரும்பிய குமார் மந்திரம், மாந்திரீகம் செய்து எனது குடும்பத்தை முன்னேற விடாமல் செய்து விட்டாயே என்று தரக்குறைவாக பேசி அரிவாளால் சுவாமிநாதனை இரு கால்களிலும் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.

பலத்த காயமடைந்த சாமிநாதன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புகாரின் பேரில் வேதாரண்யம் சப்–இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குமாரை வலைவீசி தேடி வருகிறார்.

Similar News