செய்திகள்

மயிலாடுதுறை அருகே 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

Published On 2016-07-19 16:27 IST   |   Update On 2016-07-19 16:27:00 IST
மயிலாடுதுறை அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு நடுத்திட்டு தெற்கு தெருவை சேர்ந்த 14 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (34) தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மணல் மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Similar News