செய்திகள்

காரைக்குடி அருகே கார் மோதி 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்

Published On 2016-07-11 15:46 IST   |   Update On 2016-07-11 15:46:00 IST
காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக அரசு டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வேலாயுதபட்டிணத்தைச் சேர்ந்தவர் அசோகன் (வயது37). இவர் தனது மனைவி கவிதா, மகன்கள் விஷ்வா (7), கேசவா(7) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட்டார்.

திருச்சி–ராமேசுவரம் பை–பாஸ் ரோட்டில் உள்ள செட்டிநாடு அருகே சென்றபோது காரைக்குடியை சேர்ந்த டாக்டர் அரவிந்தன் என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அசோகன், கவிதா மற்றும் 2 குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர். அசோகன், கேசவாவுக்கு கால் முறிவும், கவிதாவுக்கு தலையில் காயமும் ஏற்பட்டது.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 4 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 4 பேரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் செட்டிநாடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி அரசு டாக்டர் அரவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்தார்.

அரவிந்தன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார்.

Similar News