செய்திகள்
சிவகங்கை அருகே துப்பாக்கி-வாளுடன் 2 பேர் கைது
சிவகங்கை அருகே துப்பாக்கி மற்றும் வாளுடன் வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கையில் மதுரை ரோடு சோதனை சாவடி அருகே போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கைத்துப்பாக்கி, வாள்கள் இருந்தன.
இதைத்தொடர்ந்து காரில் இருந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை கோவனூரை சேர்ந்த ராமு மகன் பூமிநாதன் (வயது24), திருப்பாச்சேத்தி ஆவரங்காடைச் சேர்ந்த சந்திரசேகரன் (27) என்பது தெரியவந்தது
மேலும் கார் உரிமையாளர் மதுரையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவருக்கும், பிடிபட்ட 2 பேருக்கும் சம்பந்தம் உள்ளதா? கார் கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் இந்த காரை சோதனை செய்தபோது மேலும் 2 பேர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடி வருகிறார்கள். கைத்துப்பாக்கி மற்றும் வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகங்கையில் மதுரை ரோடு சோதனை சாவடி அருகே போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கைத்துப்பாக்கி, வாள்கள் இருந்தன.
இதைத்தொடர்ந்து காரில் இருந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை கோவனூரை சேர்ந்த ராமு மகன் பூமிநாதன் (வயது24), திருப்பாச்சேத்தி ஆவரங்காடைச் சேர்ந்த சந்திரசேகரன் (27) என்பது தெரியவந்தது
மேலும் கார் உரிமையாளர் மதுரையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவருக்கும், பிடிபட்ட 2 பேருக்கும் சம்பந்தம் உள்ளதா? கார் கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் இந்த காரை சோதனை செய்தபோது மேலும் 2 பேர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடி வருகிறார்கள். கைத்துப்பாக்கி மற்றும் வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.