செய்திகள்
ஆதம்பாக்கத்தில் நடந்து சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு
ஆதம்பாக்கத்தில் நடந்து சென்ற ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையர்கள் நகை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:
சென்னையில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ஆதம்பாக்கத்தில் நடந்த சம்பவம் வருமாறு:-
ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவை சேர்ந்தவர் காந்திமதி ஓய்வுபெற்ற ஆசிரியை.
இவர் நேற்று பார்த்தசாரதி நகர் 11-வது தெருவில் உள்ள தேவாலயத்துக்கு சென்று விட்டு இரவு 9½ மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள மெயின் ரோட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காந்திமதி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத காந்திமதி செயினை ஒரு கையால் பிடித்தபடி திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் செயினை முரட்டுத்தனமாக இழுத்து பறித்துச் சென்றனர்.
இதில் கழுத்தில் காயம் அடைந்த காந்திமதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காந்திமதிக்கு உதவினார்கள். போலீஸ் நிலையத்திலும் நடந்த சம்பவம் பற்றி புகார் தெரிவித்தனர்.
இதே பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பும் 65 வயது பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. அதில் இன்னும் திருடர்கள் பிடிபடவில்லை. இந்த நிலையில் மீண்டும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளதால் பெண்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அம்பத்தூர் ராஜீவ் நகரில் சில நாட்களுக்கு முன்பு ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இடித்து தள்ளி கீழே விழச் செய்தனர். பின்னர் அந்த பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து கழுத்தில் கிடந்த நகையை பறித்துச் சென்று விட்டனர். இதிலும் இன்னும் திருடர்கள் பிடிபடவில்லை.
அம்பத்தூர், ராஜீவ்நகர், திருமலைபிரியாநகர், பானு நகர் உள்ளிட்ட பகுதி களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்ய முடியாமல் திணறி வரும் நிலையில் ஆதம்பாக்கத்திலும் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறுவது போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னையில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ஆதம்பாக்கத்தில் நடந்த சம்பவம் வருமாறு:-
ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவை சேர்ந்தவர் காந்திமதி ஓய்வுபெற்ற ஆசிரியை.
இவர் நேற்று பார்த்தசாரதி நகர் 11-வது தெருவில் உள்ள தேவாலயத்துக்கு சென்று விட்டு இரவு 9½ மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள மெயின் ரோட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காந்திமதி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத காந்திமதி செயினை ஒரு கையால் பிடித்தபடி திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் செயினை முரட்டுத்தனமாக இழுத்து பறித்துச் சென்றனர்.
இதில் கழுத்தில் காயம் அடைந்த காந்திமதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காந்திமதிக்கு உதவினார்கள். போலீஸ் நிலையத்திலும் நடந்த சம்பவம் பற்றி புகார் தெரிவித்தனர்.
இதே பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பும் 65 வயது பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. அதில் இன்னும் திருடர்கள் பிடிபடவில்லை. இந்த நிலையில் மீண்டும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளதால் பெண்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அம்பத்தூர் ராஜீவ் நகரில் சில நாட்களுக்கு முன்பு ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இடித்து தள்ளி கீழே விழச் செய்தனர். பின்னர் அந்த பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து கழுத்தில் கிடந்த நகையை பறித்துச் சென்று விட்டனர். இதிலும் இன்னும் திருடர்கள் பிடிபடவில்லை.
அம்பத்தூர், ராஜீவ்நகர், திருமலைபிரியாநகர், பானு நகர் உள்ளிட்ட பகுதி களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்ய முடியாமல் திணறி வரும் நிலையில் ஆதம்பாக்கத்திலும் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறுவது போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.