செய்திகள்
வீடு வீடாகச்சென்று ஓட்டு கேட்க தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்: சிதம்பரத்தில் திருமாவளவன் பேட்டி
வீடு வீடாகச்சென்று ஓட்டு கேட்க தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்று சிதம்பரத்தில் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.
சிதம்பரம்:
தமிழக சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்டார். 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த 2 நாட்களாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இன்று அவர் சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட நான் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். தற்போது தொகுதி முழுவதும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன்.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் தேர்தலில் தில்லு முல்லு நடந்துள்ளது. அதனால்தான் நீங்கள் தோற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று என்னிடம் பொதுமக்கள் கூறுகிறார்கள்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் முறையாக தேர்தல் நடைபெறவில்லை. எனவே ஜூன் 3-வது வாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் சாலைகள் சீராக இல்லை. இங்கு பஸ் நிலையம் கட்ட முக்கியவத்தும் கொடுத்தவர்கள் சாலை சீரமைப்பில் கவனம் செலுத்தியிருந்தால் காட்டுமன்னார்கோவில் முன்னேறியிருக்கும். இனியாவது தமிழக அரசு காட்டுமன்னார்கோவில் தொகுதியில் சாலைகள் சீரமைப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டு காலத்தில் 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
தமிழக சட்டசபை தேர்தலின்போது ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவாரா? என்பது சந்தேகமாக உள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையம் சரியான முறையில் செயல்படவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.
234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணப்பட்டுவாடா செய்துள்ளன. இதை தடுக்க வருங்காலங்களில் தேர்தலின்போது வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள செலவுத் தொகையை தேர்தல் ஆணையத்திடமே வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் அந்த தொகையை செலவு செய்ய வேண்டும்.
வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் முறையை தேர்தல் ஆணையம் அனுமதிக்கக்கூடாது. பொதுக்கூட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். வீடுகளில் கட்சி சின்னம் வரையவும் தடை விதிக்க வேண்டும். ஜூலை 3-வது வாரத்தில் “வேர்களைத்தேடி” என்ற திட்டத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். அப்போது கட்சியை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாராளுமன்ற தேர்தல்தான் எங்கள் அடுத்த இலக்கு.
மேற்கண்டவாறு திருமாவளவன் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்டார். 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த 2 நாட்களாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இன்று அவர் சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட நான் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். தற்போது தொகுதி முழுவதும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன்.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் தேர்தலில் தில்லு முல்லு நடந்துள்ளது. அதனால்தான் நீங்கள் தோற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று என்னிடம் பொதுமக்கள் கூறுகிறார்கள்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் முறையாக தேர்தல் நடைபெறவில்லை. எனவே ஜூன் 3-வது வாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் சாலைகள் சீராக இல்லை. இங்கு பஸ் நிலையம் கட்ட முக்கியவத்தும் கொடுத்தவர்கள் சாலை சீரமைப்பில் கவனம் செலுத்தியிருந்தால் காட்டுமன்னார்கோவில் முன்னேறியிருக்கும். இனியாவது தமிழக அரசு காட்டுமன்னார்கோவில் தொகுதியில் சாலைகள் சீரமைப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டு காலத்தில் 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
தமிழக சட்டசபை தேர்தலின்போது ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவாரா? என்பது சந்தேகமாக உள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையம் சரியான முறையில் செயல்படவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.
234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணப்பட்டுவாடா செய்துள்ளன. இதை தடுக்க வருங்காலங்களில் தேர்தலின்போது வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள செலவுத் தொகையை தேர்தல் ஆணையத்திடமே வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் அந்த தொகையை செலவு செய்ய வேண்டும்.
வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் முறையை தேர்தல் ஆணையம் அனுமதிக்கக்கூடாது. பொதுக்கூட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். வீடுகளில் கட்சி சின்னம் வரையவும் தடை விதிக்க வேண்டும். ஜூலை 3-வது வாரத்தில் “வேர்களைத்தேடி” என்ற திட்டத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். அப்போது கட்சியை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாராளுமன்ற தேர்தல்தான் எங்கள் அடுத்த இலக்கு.
மேற்கண்டவாறு திருமாவளவன் கூறினார்.