செய்திகள்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

Published On 2016-05-08 22:31 IST   |   Update On 2016-05-08 22:31:00 IST
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன், ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டிமடம், கூவத்தூர், வடுகர்பாளையம், குப்பம் குடிக்காடு, விளந்தை சூனாபுரி, கவரப்பாளையம், வரதராசன்பேட்டை, தென்னூர், பிளாக்குறிச்சி உட்பட 20 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

பொதுமக்களிடம் வேட்பாளர் ராஜேந்திரன் பேசுகையில் கலைஞர் தலைமையில் ஆட்சி அமையும் என்பது உறுதி.  ஆண்டிமடம் புதிய தாலுக்காவாக உருவாக்கவும், இப்பகுதிகளில் அதிக அளவில் முந்திரி பயிரிடுவதால் இங்கு முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை, மற்றும் மதிப்புகூட்டல் செய்து முந்திரியை அதிக வருமானம் ஈட்ட பாடுபடுவேன். 

ஆண்டிமடம் அரசு சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த கலைஞரிடம் எடுத்துக்கூறி நிறைவேற்றுவேன் என்று கூறினார். உடன் தி.மு.க சார்பில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தருமதுரை, ஒன்றிய அவைத்தலைவர் டேவிட், சிலம்பூர் ஊராட்சி தலைவர் இளையபெருமாள், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராஜா, நகர செயலாளர் செல்வக்குமார், வார்டு கவுன்சிலர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News