உள்ளூர் செய்திகள்

சேதமான நெற்பயிரை படத்தில் காணலாம். 

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரி நீர் திறப்பால் 200 ஏக்கர் நெற்பயிர் நாசம்

Published On 2022-08-04 14:12 IST   |   Update On 2022-08-04 14:12:00 IST
  • ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரி நீர் திறப்பால் 200 ஏக்கர் நெற்பயிர் நாசமாயின.
  • விவசாயிகளுக்கு தெரியாமல் இரவு நேரங்களில் மீன்கள் பிடிப்பதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குணமங்கலம் ஏரியானது 300 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது. இதில் அதிகபட்சமாக 12 அடி நீரை தேக்கும் நிலை இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்து வரும் குணமங்கலம் ஏரியில் மீன்வளத்துறை சார்பில் ஏலம் விடப்பட்டு அதில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் தற்போது ஏரியிலிருந்து விவசாயிகளுக்கு தெரியாமல் இரவு நேரங்களில் மீன்கள் பிடிப்பதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீரானது வடிகால் மட்டும் பாசன வாய்க்கால் மூலம் அறுவடைக்கு தயாரான இப்பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கருக்கு மேல் உள்ள நெல் வயல்களில் புகுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது.

Tags:    

Similar News