உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை

Published On 2023-10-07 12:40 IST   |   Update On 2023-10-07 12:40:00 IST
  • திண்டுக்கல்லில் வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே சீலப்பாடி முருகன் நகரை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி திவ்யா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்களாக குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த திவ்யா அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தகவல் தெரிவித்தனர்.

திண்டுக்கல் அடுத்த மா.மு.கோவிலூர் முண்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர். இவரது மனைவி பச்சைய ம்மாள் (22). வீட்டில் தனியாக இருந்த பச்சைய ம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பாலசுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

மேலும் திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News