உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே 2 பெண்கள் தற்கொலை

Published On 2023-08-09 11:00 IST   |   Update On 2023-08-09 11:00:00 IST
  • நோய் கொடுமையால் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே பூதிப்புர த்தை சேர்ந்தவர் வசந்தா(45). கடந்த சில நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்க ளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த வசந்தா விஷம் குடித்து மயங்கினார்.

தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டி பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி அருகே பொம்மைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி கவுசல்யா(29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்த கவுசல்யா வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News