உள்ளூர் செய்திகள்

கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

Published On 2023-05-02 07:54 GMT   |   Update On 2023-05-02 07:54 GMT
  • தாசில்தார் விஜயன் மற்றும் அதிகாரிகள் அச்சமங்கலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • 2 லாரிகளை சோதனை செய்த போது பெரிய கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்து சென்றது தெரிய வந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு துணை தாசில்தார் விஜயன் மற்றும் அதிகாரிகள் அச்சமங்கலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் நின்ற 2 லாரிகளை சோதனை செய்த போது பெரிய கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்து சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அதிகாரி விஜயன் கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கிரானைட் கற்கள் மற்றும் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News