உள்ளூர் செய்திகள்

ராசிபுரத்தில் 2 ¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2022-12-09 14:48 IST   |   Update On 2022-12-09 14:48:00 IST
  • ராசிபுரம் டவுன் வரதன் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • சுமார் 2 ¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் வரதன் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சுமார் 2 ¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ரஜினி ( வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது? இதில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News