உள்ளூர் செய்திகள்

காரமடை அருகே சிறுவன் மீது மோட்டார்சைக்கிள் மோதியதால் 2 தரப்பினர் மோதல்

Published On 2022-06-26 15:15 IST   |   Update On 2022-06-26 15:15:00 IST
  • அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கர்ணன் எதிர்பாராத விதமாக மோனிஷ் மீது மோதினார்.
  • வீட்டில் இருந்த கர்ணனின் மனைவி சுசிலாவிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை :

கோவை காரமடை வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (வயது 55). டிரைவர். இவரது மனைவி சுசிலா (40). இவர்களுது மகன் கவுரி சங்கர் (12). இவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகராஜ் (55). சம்பவத்தன்று இவரது பேரன் மோனிஷ் வீட்டின் அருகே சாலையில் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கர்ணன் எதிர்பாராத விதமாக மோனிஷ் மீது மோதினார்.

இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மோனிஷ் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் கூறினார். இதனால் கோபம் அடைந்த மோனிஷ் தாத்தா நாகராஜ், அவரது மகன்கள் கார்த்திக் (34), பிரபாகரன் (30), நாகராஜூன் தம்பி கோவிந்தராஜ் (44), அவரது மகன் ஆகியோர் கர்ணன் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு வீட்டில் இருந்த கர்ணனின் மனைவி சுசிலாவிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் சுசிலாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.மேலும் அவரது 12 வயது மகன் சங்கரை கல்லால் தாக்கினர்.

வீட்டில் இருந்த கர்ணனின் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்தனர். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர். பலத்த காயம் அடைந்த சங்கர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுகுறித்து சுசிலா காரமடை போலீசில் புகார் அளித்தார். இதேபோன்று நாகராஜ், கர்ணன் மற்றும் சுசிலா தங்களது குடும்பத்தினரை தாக்கியதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இருதரப்பினரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News