உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது

Published On 2022-11-17 09:21 GMT   |   Update On 2022-11-17 09:21 GMT
  • சேலம் சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த 2 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
  • இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

சேலம்:

சேலம் சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் அருண் (வயது 30). சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (36). பிரபல ரவுடிகளான இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்–செயல்களில் ஈடுபட்டு வரும் பூபதி, அருண் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.

Tags:    

Similar News