உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

போடி அருகே கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2022-06-15 06:06 GMT   |   Update On 2022-06-15 06:06 GMT
  • போடி அருகே குடிப்பழக்கத்தால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
  • வருசநாடு பகுதியை சேர்ந்தவர் உடல்நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்டார்

மேலசொக்கநாதபுரம் :

தேனி மாவட்டம் போடி அருகில் குரங்கணியை சேர்ந்த ஆண்டி மகன் பாலமுருகன் (வயது38). கூலித்தொழிலாளியான இவர் குடி பழக்கத்துக்கு அடிமையானவர்.

இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பாலமுருகன் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருசநாடு அருகில் உள்ள குமணன்தொழு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 56). சிக்கன் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த ராஜா தனது கடையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News