உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில் திருட முயன்ற 2 பேர் கைது

Published On 2023-06-19 14:52 IST   |   Update On 2023-06-19 14:52:00 IST
  • சிறிது நேரத்தில் அவர் வீடு திரும்பி வந்துபார்த்தபோது மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் பணம் திருடினார்.
  • இதனை கவனித்த சபரி அந்தமர்ம நபரை கையும்களவுமாக மடக்கி பிடித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேகேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சபரி (வயது28). டிரைவரான இவரது வீட்டை சம்பவத்தன்று பூட்டிவிட்டு வெளியே சென்றார்.

சிறிது நேரத்தில் அவர் வீடு திரும்பி வந்துபார்த்தபோது மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து செல்வதை கண்டு அந்த நபரை பின்தொடர்ந்து சென்றார். அவர் பீரோவில் பணம் திருடினார். இதனை கவனித்த சபரி அந்தமர்ம நபரை கையும்களவுமாக மடக்கி பிடித்தார். இதைத்தொடர்ந்து அந்த நபரை சபரி ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த கண்பத் சென்ஷா (30) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இதேபோன்று ஓசூரை அடுத்த மத்திகிரி சிப்பாய்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகீத்பேகம் (42). இவரது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று சிறிது நேரத்தில் திரும்பிவந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்று கொண்டிருந்தார். உடனே ஷாகீத்பேகம் அந்த நபரை பின்தொடர்ந்து சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்து மத்திகிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த நபரிடம் போலீசார் விசாரித்ததில் அதேபகுதியைச் சேர்ந்த ஷேக்சாதிக் (39) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News