உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2023-04-10 11:06 IST   |   Update On 2023-04-10 11:06:00 IST
  • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • பிரபு (வயது 31), ரங்கப்பனூரை சேர்ந்த கோவிந்தன் (50) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 85 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த சின்னபுளியங்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபு (வயது 31), ரங்கப்பனூரை சேர்ந்த கோவிந்தன் (50) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 85 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News