உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2022-12-22 08:23 GMT   |   Update On 2022-12-22 08:23 GMT
  • சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார், காட்டு எடையாா் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தி யம் -இன்ஸ்பெக்டர் செல்வம் தலை மையிலான போலீசார், காட்டு எடையாா் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் காட்டு எடையார் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (20), அரவிந்த் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News