உள்ளூர் செய்திகள்
- தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயமாகினர்.
- புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் மேல்ம ங்கலம் அருகில் உள்ள அம்மாபட்டி தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகள் ேராசிணி(15). இவர் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி மாயமானார்.
பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் சாந்தி ஜெயமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
கொடைக்கானல் பிரகாசபுரத்தை சேர்ந்த தேவதாஸ் மகன் லோக நாதன்(29). இவர் பெரிய குளம் வடகரை புதிய பஸ்நிலையம் பகுதியில் தனது தந்தையுடன் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக வந்தார்.
அதன்பிறகு மாயமானார். இதுகுறித்து தேவதாஸ் பெரியகுளம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை ேதடி வருகின்றனர்.