உள்ளூர் செய்திகள்

கோவையில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

Published On 2022-11-25 09:48 GMT   |   Update On 2022-11-25 09:48 GMT
  • சுரேந்தர் மோட்டார் சைக்கிளில் கோவில்பாளையம் - துடியலூர் ரோட்டில் சென்றார்.
  • சுரேந்தரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கோவை,

சேலம் மாவட்டம் காட்டு குட்டையை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் சுரேந்தர் (வயது 23). இவர் கோவை வெள்ளமடையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பாளையம் - துடியலூர் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய சுரேந்தரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

இது குறித்து கோவி ல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள காமாட்சி புரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய நாதன். இவரது மனைவி பாக்கிய என்ற மேரி (52).

சம்பவத்தன்று இவர் கோவை-மேட்டுப்பா ளையம் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மேரியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News