உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

செம்பட்டி அருகே வேன்மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

Published On 2023-06-03 11:32 IST   |   Update On 2023-06-03 11:32:00 IST
  • உசிலம்பட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
  • சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

செம்பட்டி:

செம்பட்டி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் கபில்க ண்ணன்(23). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்க ழகத்தில் பி.ஏ., 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதே ஊரை சேர்ந்தவர் சத்யா மகன் கோபி(23). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவன த்தில் வேலை பார்த்து வந்தார். கோவில் திருவிழாவிற்காக 2 பேரும் ராமநாதபுரம் வந்தனர்.

நேற்று செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலையில் தருமத்துப்பட்டி அருகே வந்தனர். அப்போது உசிலம்பட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கபில்கண்ணன் மற்றும் கோபி ஆகியோர் உயிரி ழந்தனர். இதுகுறித்து போலீ சார் விசாரித்து வருகின்ற னர். கோவில் திருவிழாவிற்கு வந்த வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News