உள்ளூர் செய்திகள்

மனநிலை பாதித்த பெண் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-01-12 15:43 IST   |   Update On 2023-01-12 15:43:00 IST
  • மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது,
  • தூக்குப்போட்டு பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சின்னகாவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 47).

இவருக்கு சமீப காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் தூக்குப்போட்டு பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவர் மகன் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதேபோல கிருஷ்ணகிரி தாலுகா லைன் கொல்லை பகுதியை சேர்ந்த அஸ்லாம் மனைவி சஹீனா (வயது 40). இவருக்கு தீராத வயிற்றுவலி காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மகன் முஹம்மத் கொடுத்த புகாரின் பேரில் கிரு ஷ்ணகிரி தாலு க்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News