நிலக்கோட்டையில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
- நிலக்கோட்டையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- நிலக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சங்கால்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் மகன் மதன்குமார்(30). விவசாயி. குடிப்பழக்கம் இருந்ததால் வயிற்றுவலி ஏற்பட்டது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப்ப ட்டார். அங்கு மதன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிலக்கோட்ைட அருகே சி.புதூரை சேர்ந்தவர் ஈஸ்வரன்(45). கடந்த சில நாட்களுக்கு முன்பு விப த்தில் சிக்கினார். இதனால் காலில் முறிவுஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போதும் குணமாக வில்லை.
இதனால் அவர் விஷம் குடித்து மயங்கினார். நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த 2 சம்பவங்கள் குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்க ட்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.