உள்ளூர் செய்திகள்

கோவையில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-03-27 15:34 IST   |   Update On 2023-03-27 15:34:00 IST
  • ஹரிகிருஷ்ணன் அடிக்கடி தற்கொலை செய்ய போவதாக தனது பெற்றோரை மிரட்டி வந்தார்.
  • கருப்பண்ணன் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார்.

கோவை,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ராமிரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் ஹரிகிருஷ்ணன் (வயது 26). கூலித் தொழிலாளி. இவர்கள் குடும்பத்துடன் கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள பெரியகுயிலி நடுப்புதி தோட்டத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

குடிபழக்கத்துக்கு அடிமையான ஹரிகிருஷ்ணன் அடிக்கடி தற்கொலை செய்ய போவதாக தனது பெற்றோரை மிரட்டி வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொ லை செய்து கொண்ட ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடவள்ளி அருகே உள்ள லிங்கனூரை சேர்ந்தவர் கருப்பண்ணன் (95). இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்ட கருப்பண்ணன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அந்த பகுதியில் உள்ள கொய்யா மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News