உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

Published On 2023-10-05 05:25 GMT   |   Update On 2023-10-05 05:25 GMT
  • போலீசார் ரோந்தின் சென்றபோது கே.சி.பட்டியில் 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது.
  • 2 பேரையும் போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

பெரும்பாறை:

கொடைக்கானல் அருகே கே.சி.பட்டி, குப்பமாள்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் தாண்டிக்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது கே.சி.பட்டியில் 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் குப்பமாள்பட்டியை சேர்ந்த செந்தில் (வயது 38), பெரும்பாறையை சேர்ந்த ராம்குமார் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News