உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

கொடைக்கானல் அருகே காண்டிராக்டரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

Published On 2023-05-07 12:20 IST   |   Update On 2023-05-07 12:20:00 IST
  • கூக்கால் கிராமப் பகுதி சாலை தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.
  • அதே பகுதியை சேர்ந்த 2 பேர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மேல்மலை கிராம பகுதியில் தற்போது சாலை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கூக்கால் கிராமப் பகுதி சாலை தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.இந்த சாலை பணியை தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த அஜித்குமார் என்பவர் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார்.

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சிவா (24),ஜெயக்குமார் (39) ஆகிய 2 பேர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அஜித் குமார் இது குறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கொடைக்கானல் போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News