உள்ளூர் செய்திகள்

திசையன்விளை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

Published On 2022-10-22 09:13 GMT   |   Update On 2022-10-22 09:13 GMT
  • திசையன்விளை - நவ்வலடி சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
  • லாரி டிரைவர் அகிலன்,சிவா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை:

வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு திசையன்விளை - நவ்வலடி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக அதிக பாரம் ஏற்றிவந்த 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் தோவாளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அகிலன் (வயது 25), சிவா (24) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News