உள்ளூர் செய்திகள்

காட்டு யானைகளை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு

Published On 2022-07-24 11:20 GMT   |   Update On 2022-07-24 11:20 GMT
  • வாழவயல் பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
  • ஒரே நாள் இரவில் காட்டு யானை சேதப்படுத்தியதால், மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே வாழவயல் பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வனத்தை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கிருந்த இளையராஜா என்பவரின் கடையை அடித்து உடைத்தது.

தொடர்ந்து மணிகண்டன், சுலைக்கா, பெரியசாமி, வளர்மதி, சிவன் கருப்பன், முத்துமாரி, ஒவேலி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர்களின் வீடுகளையும் இடித்து சேதப்படுத்தியது.ஒரே நாள் இரவில் 7 வீடுகளையும், ஒரு கடையையும் காட்டு யானை சேதப்படுத்தியதால், மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில் காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்கவும், யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில்இருந்து விஜய், கிரி என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு வா ழவயல் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கும்கி யானைகள் மூலம் குடியிருப்பு பகுதி மற்றும் வனப்பகுதிகளில் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதுதவிர 25 வனத்துறை ஊழியர்களும், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனத்து றையினர் கூறுகையில், இந்த பகுதியில் சுற்றி திரியும் யானைகளை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதுதவிர வனத்துறை ஊழி யர்களும் கண்காணித்து வருகின்றனர்.


Tags:    

Similar News