- தூக்கி வீசப்பட்ட நாராயணப்பா சம்பவ இடத்திலேயே பலியானார்.
- ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஜோதியப்பா பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள அஞ்செட்டி துர்க்கத்தைச் சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 59). விவசாயி. இவரும் அதே ஊரை சேர்ந்த முன்னாள் சத்துணவு ஊழியர் ஜோதியப்பா (65) என்பவரும் மொபட்டில், கெலமங்கலத்திற்கு நேற்று வந்தனர்.
பின்னர் அவர்கள் தங்களின் ஊரான அஞ்செட்டி துர்க்கத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கெலமங்கலத்தில் இருந்து ராயக்கோட்டை நோக்கி சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது.
ஜக்கேரி அருகே ஒன்னுகுறுக்கி பக்கமாக வந்த போது சரக்கு வேன் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாராயணப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். ஜோதியப்பா படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாராயணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகராஜ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.