உள்ளூர் செய்திகள்

மாவட்ட பள்ளிகளுக்கு இடையே 2 நாள் இறகுப்பந்து போட்டி

Published On 2023-10-07 14:23 IST   |   Update On 2023-10-07 14:23:00 IST
  • ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் நடந்தது
  • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது

ஊட்டி,

ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆதிஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி ராஜேந்திர மகாசுவாமிகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட பள்ளிகளுக்கு இடையே 2 நாள் இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் போட்டியை தொடங்கி வைத்தார். துணைமுதல்வர் கே.பி.அருண், வடிவேலன், காளிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக க்ளென்மார்க் நிறுவன மண்டல விற்பனை மேலாளர் கிளாட்சன் பங்கேற்றார்.

தொடர்ந்து ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் மற்றும் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போட்டியின் செயலாளர்கள் சிவராமகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், கல்லூரி விளையாட்டு அலுவலர் சிவபிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News