உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

Published On 2022-12-01 14:33 IST   |   Update On 2022-12-01 14:33:00 IST
  • செட்டிக் காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.

அன்னதானப்பட்டி:

 சேலம் கருங்கல்பட்டி மு.சு.தொட்டண்ண செட்டிக் காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர் .

இதில் அங்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது. அங்கு வாகனத்தில் ஏற்றிய 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள், 250 கிலோ அரிசி மாவு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

வழக்குப்பதிவு

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அன்னதானப்பட்டி நரசிம்மன் செட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ( வயது 36), வெங்கடேஷ் (34) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News