உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2023-03-18 10:02 GMT   |   Update On 2023-03-18 10:02 GMT
  • பஸ் நிறுத்தம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கபிலா ஜாஸ்மின் ரோந்து சென்றார்.
  • 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஊட்டி

தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்து வந்தது. இதையடுத்து கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்த போதைப்பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் அதிரடி சோதனை நடத்தி, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பஸ் நிறுத்தம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கபிலா ஜாஸ்மின் ரோந்து சென்றார். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 31) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் தேவாலா நாடுகாணி சோதனைச்சாவடியில் கஞ்சா வைத்திருந்ததாக அனிஷ்மோன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News