உள்ளூர் செய்திகள்

ஓசூரில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2023-08-21 15:55 IST   |   Update On 2023-08-21 15:55:00 IST
  • மகேஷ்குமாரை, ஹரிபிரகாஷ், அருணாச் சலம் ஆகியோர் தாக்கி யுள்ளனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிபிரகாஷ், அருணாச்சலம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் சந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது34). அதே பகுதியை சேர்ந்தவர் ஹரிபி ரகாஷ், அருணாசலம்.

இந்த நிலையில் சந்தா புரம் பகுதியில் விநா யகர் சதூர்த்தியை யொட்டி நேற்று கொடி யேற்று விழா நடந்தது. இந்த விழாவில் மோதல் ஏற்பட்டது.

இதில் மகேஷ்குமாரை, ஹரிபிரகாஷ், அருணாச் சலம் ஆகியோர் தாக்கி யுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மகேஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர்.

இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிபிரகாஷ், அருணாச்சலம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News