உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு

Published On 2022-06-24 09:55 GMT   |   Update On 2022-06-24 09:55 GMT
  • கடந்த 20-ந் தேதி திருமண ஆசை காட்டி மாணவியை சென்னைக்கு தனியார் பஸ்சில் கடத்தி சென்றார்.
  • ரெயில் நிலையத்தில் மாணவியுடன் சுற்றிய உட்டாம் பாவூரியை கைது செய்தனர்.

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் மாணவிக்கும், ஆழியாறு பூங்காவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த உட்டாம் பாவூரி (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர் கடந்த 20-ந் தேதி திருமண ஆசை காட்டி மாணவியை சென்னைக்கு தனியார் பஸ்சில் கடத்தி சென்றார். மேலும் அவர் பஸ்சில் செல்லும் போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் தந்தை ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.

ஆழியாறு போலீசார் சென்னை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ரெயில் நிலையத்தில் மாணவியுடன் சுற்றிய உட்டாம் பாவூரியை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆழியாறு போலீசில் ஒப்படைத்தனர்.

10-ம் வகுப்பு மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த உட்டாம் பாவூரி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News