உள்ளூர் செய்திகள்

பரமத்தி வட்டாரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீதம் மானியம்

Published On 2023-05-10 12:28 IST   |   Update On 2023-05-10 12:28:00 IST
  • வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆதி திராவிட விவசாயிகளுக்கு மட்டும் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
  • ஆகையால் விருப் பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வீரணம்பாளையம், சுங்ககாரன்பட்டி, கூடச்சேரி, பிராந்தகம் ஆகிய கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச் சித்திட்ட கிராமங்களில், வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆதி திராவிட விவசாயிகளுக்கு மட்டும் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீதம் மானியத்திலும், பண்ணைக்குட்டை மற்றும் பவர்டில்லர், அனைத்து விவசாயிகளுக்கும் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஆகையால் விருப் பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங் களுக்கு உதவி வேளாண்மை இயக்குநர் பரமத்தி அலுவ லகத்தை தொடர்பு கொள்ளு மாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News