உள்ளூர் செய்திகள்

கோவையில் ஒரே நாளில் கஞ்சா விற்பனை செய்த 10 பேர் கைது

Published On 2023-05-06 09:54 GMT   |   Update On 2023-05-06 09:54 GMT
  • கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கின்றனர்
  • அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை,

கோவையில் நேற்று போலீசார் நடத்திய தீவிர சோதனையில் ஒரே நாளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 2.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாநகரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை கும்பலை பிடித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாநகரில் நேற்று போலீசார் கஞ்சா விற்பனையை ஒழிக்க தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரத்தினபுரி, செல்வபுரம், குனியமுத்தூர், சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்த ரத்தினபுரி சம்பத் நகர் சூர்யபிரகாஷ்(23), செல்வபுரம் கீரைத்தோட்டத்தை சேர்ந்த சரவணன்(40), தேனி மாவட்டத்தை சேர்ந்த கோவை கல்லூரி மாணவர் மாதேஷ் குமார்(19) உள்ளிட்ட 10 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News